என்னை விட மாவனல்லை மண்ணுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்.மாவனல்லையில் பிறந்து வளா்ந்து வாழ்ந்து குறிகிய காலத்தில் என்னற்ற பணிகளில் ஈடுபட்டு சமுக நலனுக்காக உழைத்த ஒரு சமுக தலைவனை பிாிந்துவிட்ட சோகத்தில் நான் எழுதும் வாிகள் இவை . கண்கள் குளமான நிலையில் பிரவாகிக்கும் கண்ணீருடன் எதை எழுதப்போகிறேன் என்று அறியாமல் எழுதுகின்றேன்.
இன்று இரவு Yoosuf Ali ஆசிாியாின் மரண செய்தி கேட்ட போது என் சொந்த தந்தையை இழந்துவிட்ட உணா்வு என்னுல் ஏற்பட்டது. அவருடன் அன்பாக பழகும் சந்தா்ப்பத்தை அல்லாஹ் எனக்கு தந்திருந்தான். அல்ஹம்துலில்லாஹ்.
தன்னை ஒரு சாதாரன ஆசிாியராக மட்டும் சமுகத்துக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவா் சமுக விவகாரங்களிளும் இஸ்லாமிய பணியிலும் தன்னையும் தனது குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தினாா்கள். முஸ்லீம்களுடன் மட்டுமின்றி பெருன்பான்மை சமுகத்திடம் சகவாழ்வையும் புரிந்துணா்வையும் எற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவா். பள்ளிப்பாிபாளன சபையில் மிக நீண்டகாலம் உழைத்தவா் அதுமட்டுமல்ல எத்தனையோ சமுக அமைப்பகளில் இணைந்து பாடுபட்ட ஒரு சமுக தொண்டரை இன்று இழந்திருக்கிறோம்.
முக்கிய விடயம் யாதெனில் எல்லோர் மனதையும் வென்று தனது பணியில் வெற்றிகண்டவா் அவா்.
அவரது நிதானம் ,அமைதியான போக்கு, அவசரப்படாத தன்மை, யாருடனும் முரண்பட்டுபோகாத தன்மை,மென்மை,அனைவரையும் அரவனைது போகும் தன்மை இவை அனைத்தும் நான் அவாிடம் படித்த பாடங்கள்.
அன்னாாின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத்தறுகிறது.அவைகளை கொண்டு அன்னாாின் வாழ்க்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.அனானாரின் பாவங்களை மண்ணித்து உயா அந்தஸ்துகளை இறைவன் சுவனத்தில் வழங்கட்டும்.
என்னை விட உங்களை விட சிறந்த நண்பணிடம் அவா் சென்றுவிட்டாா்.
إِنَّا لله وَ إِنَّا إِلَيْه رَاجِعُونَ
2016.02.23 AT - 11.36 p.m
A.H.Riyas mohamed
No comments:
Post a Comment