Prof

Tuesday, February 16, 2016

மைத்திரி இல்லாத ஆட்சி கேட்டேன்

வெலிக்கடை ஜெயிலில் ஒரு பொன்மாலைப் பொழுது..

பல்வேறுபட்ட உபாதைகளால் அவதியுறும் ஞானசார
 
தனது கடந்து வந்த பாதையை நினைத்து கடும் விரக்தியில்
உச்ச பட்ச டெசிபளில் பாடத் தொடங்குகிறார்..

இந்நாட்களில் அவருக்கு சரளாமாய் தமிழ் வருகிறது..

சோனகன் இல்லாத தேசம் கேட்டேன்
மைத்திரி இல்லாத ஆட்சி கேட்டேன்

ஜெயிலர் : ஹோய் பாடாத..
ஞானசாரா :என்ன பாடக் கூடாதா?..நான் அப்படியே தான் பாடுவேன்...என்ன செய்வே ? பலயங் யகோ யன்ன.. தமுஸே சின்ஹலயக் த ?

ஞானசார தொடர்ந்து பாடுகிறார்

சோனகன் இல்லாத தேசம் கேட்டேன்
மைத்திரி இல்லாத ஆட்சி கேட்டேன்
இரத்தத்தில் என்றென்றும் சின்ஹ லே கேட்டேன்
இந்த நாட்டின் பேரை மாற்றக் கேட்டேன்..

ஹலால் இல்லாத உணவுகள் கேட்டேன்
முஸ்லிம் பெண்கள் ஆடைகளை தடை செய்யக் கேட்டேன்
காதி கோர்ட்டை ஒழிக்க கேட்டேன்
உலமா சபையைக் கலைக்க கேட்டேன்

கோட்டாபாய ஆளும் நாடு கேட்டேன்
மகிந்த மாதிரி ஒரு தலைவன் கேட்டேன்
சுற்றித் திரிய டிபன்டர்கள் கேட்டேன்
மீட்டிங்குகள் வைக்க அனுமதி கேட்டேன்

சின்னச் சின்னக் கலவரங்கள் கேட்டேன்
சீக்கிரம் தணியாத பிரச்சினைகள் கேட்டேன்
ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுக்க சிங்களப் பெண்களைக் கேட்டேன்
சோனக கடைகளில் கொள்வனவுகளை நிறுத்தக் கேட்டேன்
பள்ளிகளை எல்லாம் உடைக்கக் கேட்டேன்
மாடுகளை எல்லாம் மதிக்கக் கேட்டேன்

மியன்மார் போன்ற ஒரு நாடு கேட்டேன்
விராது போல் வாழ வரம் ஒன்று கேட்டேன்
வழக்குகள் இல்லாத வாழ்க்கை கேட்டேன்
குறைந்த பட்சம் குர் ஆனைத் தடை செய்யக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்...!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment